பஸ் பயணிகள் அவதி

Update: 2022-10-30 13:56 GMT

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்திற்கு தனியார் மற்றும் நகர பஸ்கள் சரிவர வருவதில்லை. இலுப்பூருக்கு செல்லும் பஸ்கள் கா.சத்திரத்தில் முக்கண்ணாமலைப்பட்டி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். காலை மற்றும் இரவு நேரங்களில் சரிவர ஊருக்குள் பஸ்கள் வராததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி