பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2022-10-26 15:10 GMT


கும்பகோணம் பைபாஸ் நான்கு ரோடு ரவுண்டானா பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் நிற்காமல்செல்கிறது. மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருந்தாலும் பஸ்கள் நிற்பது இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளைச்சாமி பாக்யராஜ், கும்பகோணம்

மேலும் செய்திகள்