அந்தியூர் அருகே நகலூர் பெருமாபாளையம் கிராமத்தில் கொம்பு தூக்கி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் தரைப்பாலம் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் இந்த தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பாலத்தை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனே பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.