பெரம்பலூர் நகரின் முக்கியமான சாலைகளில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இரு, நான்கு வாகனங்களை நிறுத்தி விட்டு டீக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைக்கு சென்று விடுகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் அல்லது அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.