பரங்கிப்பேட்டையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்று வர சிதம்பரம் அல்லது கடலூா் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அப்பகுதி பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். தற்போது தீபாவளி பண்டிகை வர இருப்பதால் பரங்கிப்பேட்டையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.