பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-10-12 07:43 GMT

அந்தியூரில் இருந்து காட்டூர், பாட்டப்பன்கோவில், பருவாச்சி வழியாக அம்மன்பாளையம், ஒலகடம் வரை இயக்கப்பட்டு வந்த மினி பஸ் கடந்த ஆண்டு முதல் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்தியூர், பவானி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பஸ்சில் சென்று வருகின்றனர். எனவே அந்தியூரில் இருந்து பவானிக்கு ஒலகடம், அம்மன்பாளையம் வழியாக தினமும் காலை, மாலை வேளைகளில் டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ்வேண்டும்.

மேலும் செய்திகள்