கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

Update: 2022-10-09 14:34 GMT
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர் வழியாக பொண்ணகரம் வரை இயக்கப்படும் அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்கள், வெளியூருக்கு வேலைக்கு சென்று வரும் பெண்கள் என கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிலர் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த வழிதடத்தில் மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் இடையில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி