ஊருக்குள் பஸ் வருமா?

Update: 2022-10-02 18:45 GMT

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு கேரளாவில் இருந்து அரசு பஸ் ஒன்று தினமும் மதிய நேரத்தில் இயக்கப்படுகிறது. இந்த பஸ் செட்டிகுளம், கூடங்குளம் ஆகிய ஊருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் இருந்து போதிய பஸ்கள் கிடையாது. இதனால் மேற்குறிப்பிட்ட பஸ் ஊருக்குள் வந்து சென்றால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்