அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் மாதா கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பயணிகள் நிழற்குடை பழுந்தடைந்து பல ஆண்டுகளாக சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து மோசமாக உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.