வாகன நிறுத்துமிடம் வேண்டும்

Update: 2022-09-28 14:17 GMT

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் புனரமைக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த குளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டு இருக்கிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து, குளத்தின் அழகை கண்டு ரசித்து செல்கின்றனர். ஆனால் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் சாலையோரங்களில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி