புதிய பஸ் நிலையம் வேண்டும்

Update: 2022-09-26 14:34 GMT
கரூர் மாவட்டம், குளித்தலையில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டுமே நிற்கும் வகையில் உள்ளது. இதனால் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தின் உள்ளே வராமல், வெளியிலேயே பயணிகளை இறக்கி, ஏற்றி வருகின்றன. திருச்சி மார்க்கம் மற்றும் கரூர் மார்க்கத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பஸ்களும், மணப்பாறை, முசிறி மார்க்கத்திலும் நூற்றுக்கணக்கான பஸ்களும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து சென்று வருகின்றன. இதனால் பயணிகள் ஒதுங்கி நிற்கக்கூட இடமின்றி கடை வாசல்களில் நிற்கின்றனர். எனவே, அனைத்து வசதிகளும் கொண்ட புதிய பஸ் நிலையம் குளித்தலையில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி