பல்லடம் பஸ் நிலையத்திற்குள் வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-09-25 10:42 GMT

பல்லடம் பஸ் நிலையத்திற்குள்

வேகத்தடை அமைக்க வேண்டும்

பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கிலான வேகத்தடை சிறிது, சிறிதாக, உடைந்து போனது தற்போது வேகத்தடை இல்லாததால், அதி வேகத்தில் இயக்கப்படும் பஸ்களால் விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பல்லடம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பஸ் நிலையத்தில் பழுதடைந்த வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும்

அர்ஜூன்ராஜ்,பல்லடம்.

9942051200

மேலும் செய்திகள்