பயனற்ற நிழற்குடை

Update: 2022-09-24 17:35 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் பயணிகள் பயன்பாட்டுக்காக நிழற்குடை கட்டப்பட்டது. இந்தநிலையில் நிழற்குடையை சுற்றி புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள் வெயில், மழைக்காலங்களில் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே முட்புதர்களை அகற்றி நிழற்குடையை சீரமைத்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முன்வருவார்களா?

-சதீஷ்குமார், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி