கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-09-24 12:35 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்வதை தினமும் காணலாம். இதனை பார்க்கும் பெற்றோர்கள், பொதுமக்கள் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்