சிவகங்கை மாவட்டம் பொண்ணமராவதியிலிருந்து மதுரைக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்டுவந்த பஸ் கடந்த 2 வருடங்களாக பிராண்மலை வந்து செல்லாமல் சிங்கம்புணரி வரை மட்டுமே வந்து செல்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் பழைய வழித்தடத்தில் பஸ் இயக்கிட வேண்டும்.