பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை தேவை

Update: 2022-09-23 14:01 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பஸ் நிலையத்திற்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளர்கள் காலை நேரங்களில் வருகின்றனர். பின்னர் இங்கிருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் பெரும்பாலான அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் சென்று வருகிறது. ஒரு சில தனியார் பஸ்களே வந்து செல்கிறது. இதனால் மணிகணக்கில் காத்து கிடக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்