நள்ளிரவு நேரத்தில் பெரம்பலூருக்கு அரசு பஸ்கள் வர நடவடிக்கை தேவை

Update: 2022-09-22 14:49 GMT
திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து பெரம்பலூர் வழியாக வெளியூர்களுக்கு நள்ளிரவில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பெரம்பலூர் பயணிகள் ஏற்றப்படுவதில்லை. தொலை தூர பயணிக்கும் பயணிகளை மட்டு்ம் பஸ்களில் டிரைவர், கண்டக்டர் ஏற்றுகின்றனர். இதனால் பெரம்பலூர் பயணிகள் நள்ளிரவு நேரத்தில் பஸ் நிலையங்களில் அதிகாலை வரை காத்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதில் பெண் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து த்துறை அமைச்சர் சிவசங்கர் தொகுதியான குன்னம் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்துக்கு இந்த கதி என்று பயணிகள் புலம்புகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நள்ளிரவு நேரத்தில் பெரம்பலூருக்கு செல்லும் பயணிகளை பஸ்களில் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்