போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2022-09-22 11:57 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதி சாலையில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. இதன்காரணமாக வாகனங்கள் சேதமடைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

படம் இல்லை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி