சேதமடைந்த மரப்பாலம்

Update: 2022-09-22 11:40 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் கிராமத்தில் ஈரவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை கடந்து செல்ல அதன் குறுக்கே மரப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், ஆடு,மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வோர் ஆகியோர் சென்று வருகின்றனர். தற்போது இந்த பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி