சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-09-21 15:59 GMT

மன்னார்குடி பைபாஸ் சாலையில் மன்னை ராஜகோபால கல்லூரி அமைந்துள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த சாலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இவ்வாறு போக்குவரத்து மிக்க இந்த சாலையின் இரண்டு புறமும் சாலையோரத்தில் கனரக வாகனங்கள், பொக்லின் எந்திரங்கள் ஆகியவை நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி