போதிய பஸ் வசதி இல்லை

Update: 2022-09-21 15:53 GMT

திருவாரூர் தாலுகா அலிவலம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து திருவாரூர் செல்வதற்கு காலை நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், என திருவாரூர் நகருக்கு பல்வேறு வேலைக்காக செல்லும் பலர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் படியில் தொங்கியவாறு பயணம் செய்வதால் தவறி விழுந்து காயம் அடைந்தும் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி