சாலையோரம் தானியங்களை உலர வைப்பதால் மக்கள் அவதி

Update: 2022-09-20 12:37 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் அரியலூர்-ஸ்ரீபுரந்தான் சாலையில் சாத்தம்பாடியில் இருந்து ஸ்ரீபுரந்தான் வரை சாலையின் ஓரங்களில் ஓரிரு தினங்களாக ஒரு சிலர் சூரியகாந்தி மற்றும் மக்காச்சோளம் போன்ற தானியங்களை உலர்த்தி காய வைக்கின்றனர் . இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்