மாலை நேரங்களில் டவுன் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-09-20 12:10 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மேற்பனைக்காடு, சொர்ணக்காடு, மணக்காடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினசரி டவுன் பஸ்சில் வந்து செல்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பஸ் மட்டுமே வந்து செல்வதால் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகள் பஸ்சில் ஏற முடியாமல் படிகளில் தொங்கி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி மாலை நேரத்தில் கீரமங்கலம் முதல் மணக்காடு வரை டவுன்பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி