விபத்து அபாயம்

Update: 2022-09-19 17:36 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி ஊராட்சி காவேரி அம்மன் கோவில் அருகே சென்னை- கன்னியாகுமரி தொழிற்தடச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இச்சாலைக்கு இருபுறமும் நீர் நிலையும், ஒரு பகுதியில் நா.கோவில்பட்டிக்கு செல்லும் புறவழிச்சாலையில் உள்ளதால் விபத்து அதிகமாக நடைபெறுகிறது. எனவே இப்பகுதியில்  வேகத்தடை அமைத்து எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்