வாகனங்களை துரத்தும் நாய்கள்

Update: 2022-09-19 14:38 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், சிறுவர்-சிறுமிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக அவர்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி