பஸ்களை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-18 08:53 GMT

நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம், குற்றியாணி, கடியப்பட்டணம் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இரவில் இந்த பஸ்களில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. மழைக்காலங்களில் பஸ்களின் மேற்கூரை ஒழுகுவதால் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே பயணிகள் நலன்கருதி பழைய பஸ்களை அகற்றிவிட்டு தரமான பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.மகேஷ், ராஜாக்கமங்கலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி