மதுரை மாவட்டம் சாப்டூரில் இருந்து உசிலம்பட்டி செல்ல போதிய அளவு பஸ் வசதி இல்லை. இதனால் இந்த வழியாக பயணம் செய்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.