போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-17 14:33 GMT

கூத்தாநல்லூரில் இருந்து கொரடாச்சேரி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையின் 2 பக்கங்களிலும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று வருகின்றனர். கனரக வாகனங்களும் இந்த வழியாக செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி