கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

Update: 2022-09-16 17:00 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து காலை 9 மணிஅளவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டுக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. அந்த ஒரு பஸ்சில் அதிகளவில் கல்லூரி மாணவர்கள் பயணிக்க வேண்டியது உள்ளது. இதனால் அவர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் அடுத்த பஸ்சுக்காக பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

-புவனேஷ்வரி, எடப்பாடி, சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி