கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-16 11:45 GMT

கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் இயங்கி வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தொலைதூரங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு கனியாமூரில் இருந்து தங்கள் ஊருக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இயக்கப்படும் ஒரு சில பஸ்களிலும் கூட்டம் அலைமோதுவதால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கனியாமூர் வழியாக கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்