மயிலாடுதுறை மாவட்டம் மணல் மேடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், மணல்மேடு