நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு கோடப்பமந்து பகுதியில் சாலைகள் படுமோசமாக காட்சியளித்தன. இதனால் அந்த வழியாக இரு சக்கரங்களில் செல்பவர்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை சரி செய்ய வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியல் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது சாலையை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி.