போக்குவரத்து விதிமீறல்

Update: 2022-09-13 16:44 GMT

நாமக்கல் முதலைப்பட்டி பைபாசில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இருசக்கர வாகனங்கள் எதிர்திசைக்கு செல்ல இடைவெளி விடப்பட்டு இருக்கிறது. மேலும் மழைநீர் வடிய வசதியாக ஆங்காங்கே வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கும். இதன் வழியாக ஏராளமான இருசக்கர வாகன ஒட்டிகள் சாலையை கடக்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து விதியை மீறுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி