அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து சுத்தமல்லிக்கு குறைந்த அளவிலான அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதினால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி சென்று வரும் மாணவ- மாணவிகள் அதிக அளவில் இந்த பஸ்களில் பயணம் செய்வதினால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.