கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-13 12:12 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இருந்து கந்தர்வகோட்டைக்கு 2 அரசு டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கபடுகின்றன. இந்த வழித்தடம் கிராம பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் இந்த பஸ்களில் படிகட்டுகளில் தொங்கிய நிலையில் ஆபத்தான பயணம் செய்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி