ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பகலில் கனரக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.