பயன்படுத்த முடியாத சாய்வுதளம்

Update: 2022-09-13 08:53 GMT

ஏ.டி.எம். மையங்களில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளில் வந்து செல்ல வசதியாக சாய்வுதள பாதை அமைக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் சுசீந்திரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாய்வுதள பாதையின் மேலே 2 படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால், சக்கர நாற்காலிகளில் வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாமல் திரும்ப செல்கிறார்கள். எனவே, சாய்வுதளத்தை சரியாக அமைத்து மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.சமியன்பிள்ளை, திட்டுவிளை.

மேலும் செய்திகள்