புதிய பாலம் அமைக்க வேண்டும்

Update: 2022-09-12 12:53 GMT

பாப்பாக்குடி யூனியன் பழவூர் பஞ்சாயத்து 6-வது வார்டு தெற்கூர் மெயின் ரோட்டில் உள்ள ஓடை பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் நடுவில் பெரிய துவாரம் விழுந்ததால், அதன் ஓரத்தில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றன. மற்ற வாகனங்களில் அவசர காலங்களில் கூட ஊருக்குள் செல்ல முடியாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி