ஆபத்தான நிழற்குடை

Update: 2022-09-11 16:35 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஒடப்பவிடுதியில் பயணிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட பயணிகள் நிழற்குடை உள்ளது. ஒடப்பவிடுதி, மணமடை, திருப்பக் கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். அருகில் நிழல்தரும் மரங்களோ வேறு கட்டிடங்களே இல்லாததால் இந்த நிழற்குடை அப்பகுதி கிராம மக்களின் அத்யாவசிய தேவையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த நிழற்குடையின் சுற்றுசுவர்கள், மேற்கூரை என இடிந்து கொட்டிய வண்ணம் உள்ளது. இதனால் இங்கு நிற்கவே பொதுமக்கள் அச்சபடுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி