பஸ்களில் ஆபத்தான பயணம்

Update: 2022-09-11 15:11 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் தொழிற்சாலைகளுக்கும், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் பஸ்சில் சென்று வருகின்றனர். இதனால் ஓசூர்- தேன்கனிக்கோட்டை வழி தடத்தில் சென்று வரும் பஸ்களில் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே ஓசூர்- தேன்கனிக்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்பரசன், ஓசூர்.

மேலும் செய்திகள்