அரியலூர் மாவட்டம், விளாங்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு பல கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள், நோயாளிகள் வருகின்றனர். ஆனால் இந்த மருத்துவமனைக்கு பஸ் நிறுத்த வசதி இல்லை. இதனால் நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.