பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்

Update: 2022-07-12 15:19 GMT

பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிகளுக்கு அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து படித்து விட்டு செல்கின்றனர். இது தவிர பரங்கிப்பேட்டையில் இருந்தும் சி.முட்லூர், பி.முட்லூர், புவனகிரி, சிதம்பரம், கீரப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஆனால் பரங்கிப்பேட்டைக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் நின்றபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதை தடுக்க காலை, மாலை நேரங்களில் பரங்கிப்பேட்டையில் இருந்து கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி