போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-09 17:00 GMT

சேலம் சங்ககிரி மெயின் ரோட்டில் இருந்து திருச்செங்கோடு பிரிவு சாலை வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை கடைக்கு முன்பு நிறுத்தி வைத்து விடுகின்றனர். குறிப்பாக மாலை வேளைகளில் இப்பிரச்சினை பெரிதாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பஸ் ஸ்டாப்பிற்கு வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, சங்ககிரி, சேலம்.

மேலும் செய்திகள்