கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வழியாக பெங்களூரு, சேலம், சென்னை என வெளியூர்களுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த சுங்கச்சாவடி அருகே கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
-ரமேஷ், சந்தூர், கிருஷ்ணகிரி.