பெரம்பலூர் மாவட்டம், கோனேரிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்தூர் பிரிவு சாலையில் செல்லும் தனியார் பஸ்கள் சாலை விதிகளை கடைபிடிப்பது இல்லை. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.