போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-08 16:13 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நாள்தோறும் பஜார் தெரு, கீழ்த்தெரு, முனியம்மா சர்க்கிள் ஆகிய பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், பள்ளி குழந்தைகளும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த நேரங்களில் வெளிவட்ட சாலை (பேரிகை சாலை) யை வாகன ஓட்டிகள் பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நாகராஜ், சூளகிரி - கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி