அகற்ற வேண்டிய பேனர்கள்

Update: 2022-09-07 17:02 GMT

நாமக்கல் மணிக்கூண்டு அருகே ஏராளமான கடைகள் உள்ளன. அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 சக்கர வாகன போக்குவரத்தை மட்டுமே போலீசார் அனுமதித்து வருகின்றனர். அந்த இடத்தில் உள்ள சிக்னலை மறைக்கும் விதத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய சூழல் உள்ளது. அதனால் பரமத்தி சாலையில் இருந்து மணிக்கூண்டு நோக்கி வருபவர்களுக்கு சிக்னல் எரிவது சரிவர தெரிவதில்லை. எனவே சிக்னலை மறைக்கும் விதத்தில் வைக்கப்பட்டு உள்ள பேனர்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி