கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் மழைக்காலங்களிலும், கோடை காலங்களிலும் நிற்க போதிய இட வசதி இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த 2 இடங்களிலும் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-நிர்மல், பர்கூர் கிருஷ்ணகிரி.