போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-06 15:45 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மாநிலங்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் பஸ்களில் வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. பஸ் நிலையத்திற்குள் உள்ள மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. மேலும் ஆங்காங்கே கடைகள் முன்பு வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சலாவுதீன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ்வசதி