பஸ் வசதி வேண்டும்

Update: 2022-09-06 05:15 GMT

கோபியில் இருந்து தினமும் ஏராளமானோா் காங்கேயத்துக்கு  வேலைக்காகவும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கும் சென்று வருகிறாா்கள். ஆனால் காங்கேயம் செல்ல காலை ௭.௧௫ மணி அளவில் ஒரே ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சும் மாலை நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் காங்கேயத்தில் இருந்து மாலை நேரத்தில் திருப்பூா் அல்லது பெருந்துறை அல்லது ஈரோடு வழியாக சுற்றி கோபி செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகள்  வேலைக்கு செல்பவா்கள் அவதிப்பட்டு வருகிறோம். உடனே காங்கேயத்தில் இருந்து கோபிக்கு மாலை ௬ மணி அளவில் பஸ் இயக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்